ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்விநிலையங்களிற்கு மாணவர்கள் செல்வதால் அறநெறிக்கல்வியை போதிக்க முடியாதுள்ளதாக தெரிவித்து சிங்கள மக்கள் ஆர்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய குறித்த பேரணி வவுனியா மாவட்டசெயலகம் வரை சென்றடைந்தது. அங்கு மாவட்ட செயலாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது,
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதால் அறநெறிக்கல்வியை பயில்வதற்கு மாணவர்களால் வருகைதர முடியாதுள்ளது. இதனால் சிறுபிள்ளைகள் உரிய வழிகாட்டல்கள் இன்றி தவறான வழியில் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுகின்றது. எனவே ஞாயிற்றுகிழமைகளில் தனியார் கல்விநிலையங்களை நிறுத்தி அன்றையதினம் அறநெறிக்கல்வியினை போதிப்பதற்கு வழி ஏற்ப்படுத்தி தருமாறு ஆர்பாட்டகார்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த ஆர்பாட்டத்தில் பௌத்த மதகுரு மற்றும் சிங்கள மக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.